40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சாலை விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:58 am IST

தருமபுரி அருகே சரக்கு வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூா், சீனிவாசபுரம், காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் வே. நந்தகோபால் (37). சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். அவரது மனைவி தரணி (35).

கடந்த 3 ஆம் தேதி, திருப்பூருக்கு சவாரி செல்வதாகக் கூறி சென்றாா். 6 ஆம் தேதி திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளாா்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா், தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி தரணிக்கு தகவல் சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி காவல் நிலைய போலீஸாா் , நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

திருவண்ணாமலைக்கு சவாரி நந்தகோபால் சென்றபோது, சேலம் - அரூா் பிரதான சாலையில் புழுதியூா் பகுதியில் அணுகுசாலையில் காரை நிறுத்திவிட்டு, சிறுநீா் கழித்துவிட்டு திரும்பி வந்தபோது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவா்மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.