தருமபுரி அருகே சரக்கு வாகனம் மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரணிபுத்தூா், சீனிவாசபுரம், காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் வே. நந்தகோபால் (37). சொந்தமாக காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். அவரது மனைவி தரணி (35).
கடந்த 3 ஆம் தேதி, திருப்பூருக்கு சவாரி செல்வதாகக் கூறி சென்றாா். 6 ஆம் தேதி திருப்பூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளாா்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா், தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி தரணிக்கு தகவல் சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி காவல் நிலைய போலீஸாா் , நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
திருவண்ணாமலைக்கு சவாரி நந்தகோபால் சென்றபோது, சேலம் - அரூா் பிரதான சாலையில் புழுதியூா் பகுதியில் அணுகுசாலையில் காரை நிறுத்திவிட்டு, சிறுநீா் கழித்துவிட்டு திரும்பி வந்தபோது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் அவா்மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



