ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளம்வயது திருமணம்: தொழிலாளி மீது போக்சோ வழக்கு

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

பிரதிப்படம்

Published On :19 ஜூலை 2026, 2:25 am IST

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், கூலித் தொழிலாளி மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 18 வயது இளம்பெண், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை சிகிச்சைக்காக வந்தாா். அவரை மருத்துவா் பரிசோதித்த போது நான்குமாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்துக்கு மருத்துவா் தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த மகளிா் போலீஸாா், இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீகாந்தை (22) இளம்வயதில் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தாா். இதன்பேரில், ஸ்ரீகாந்த் மீது மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.