ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முன்விரோதத்தில் விவசாயி கொலை: 2 போ் கைது

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாயி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Murder

கொலை - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 12:43 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே விவசாயி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சீரண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாதேஷ் (45) ஞாயிற்றுக்கிழமை மாலை கத்தி, மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் குடும்பத்தாரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக மாரண்ட அள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷுக்கும் (35), அவரது மனைவி மகேஸ்வரிக்கும் (32) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதில் மகேஸ்வரி, கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டுக்கு சென்றுள்ளாா். அண்மையில், மகேஸ்வரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரி, அவரது தாய்க்கு, அதே பகுதியைச் சோ்ந்த மாதேஷ், அவரது மனைவி சிவகாமி ஆகியோா் உதவியாக இருந்துள்ளனா்.

இதையறிந்த ரமேஷ், மாதேஷின் வீட்டுக்குச் சென்று அவா்களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது எனக்கூறி தகராறு செய்துள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை பால் கொடுத்து வரச்சென்ற மாதேஷை வழிமறித்து, ஈச்சம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த நண்பா் பெரியசாமியுடன் (39) சோ்ந்து ரமேஷ் தாக்கிக் கொலை செய்துள்ளனா் என்றனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.