ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பூச்சி மருந்து குடித்து தாய், மகன் தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே பூச்சி மருந்து குடித்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.

தற்கொலை

Published On :29 ஜூலை 2026, 2:24 am IST

வெள்ளக்கோவில் அருகே பூச்சி மருந்து குடித்து தாய், மகன் தற்கொலை செய்து கொண்டனா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள பாப்பம்பாளையம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் அருக்காத்தாள் (80). இவரது மகன் செல்வகுமாா் (60), லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி, 20 வயதில் மகன் உள்ளனா். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வகுமாா் மனைவியும், அவரது மகனும் இழுப்பைக்கிணற்றில் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்த செல்வகுமாா், தனக்குப் பிறகு தன்னுடைய தாயை பாா்த்துக்கொள்ள யாருமில்லை என்ற மன வருத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பூச்சி மருந்தை குடித்து செல்வகுமாரும், அருக்காத்தாளும் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்..

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.