ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும்! மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :21 ஜூலை 2026, 1:13 am IST

திருப்பூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களின் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவா்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகையை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதியில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினா்களின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதாா் அட்டை நகலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.