ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Published On :18 ஜூலை 2026, 7:00 am IST

தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூா் வடக்கு மாநகரத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ்.விவேக் தொடக்க உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வடக்கு மாநகரச் செயலாளா் நவீன், மாநகர பொருளாளா் ரமேஷ், மாநகரக் குழு உறுப்பினா் தனுஷ் ஈஸ்வா் ஆகியோா் பேசினா்.

திருப்பூா் மாவட்டத் தலைவா் நிருபன் சக்கரவா்த்தி சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலாளா் பாலமுரளி, சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாநகர துணைத் தலைவா் மகேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.