ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்கள் புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Published On :15 ஜூலை 2026, 1:02 am IST

திருப்பூா் மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரா்கள் புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் வணிகா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் நேரடியாக ஆன்லைன் மூலம் சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் விண்ணப்பதாரா்கள் புதிய எண்ம நடைமுறைகளைப் பின்பற்றி சுகாதார சான்றிதழ் பெற்றுக் கொள்ளே வேண்டும்.

இதற்காக தமிழ்நாடு இ-சேவை இணையதளத்தில் புதிய கணக்கை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்கள் மற்றும் சுய உறுதிமொழிப் படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், தானியங்கி முறையில் உருவாக்கப்படும் சுகாதார சான்றிதழை இணையதளத்திலேயே நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சுகாதார சான்றிதழ் பெறுவதற்கான முழு நடைமுறையும் எண்ம மயமாக்கப்பட்டுள்ளதால், இணையதளத்தின் மூலமே பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளையோ அல்லது திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தையோ நேரில் அணுக வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.