குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கைது - பிரதிப் படம்
கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்ய வைத்திருந்த சரத்குமாா் (23) என்பவா் மீது வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்பதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி புதன்கிழமை ஆணை பிறப்பித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




