20 Dec, 2025 Saturday, 03:54 AM
The New Indian Express Group
திருப்பூர்
Text

இடுவாய் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு

PremiumPremium

திருப்பூா் அருகே இடுவாய் கிராமத்தில் உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு

Rocket

ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடுவாய் பகுதி பொதுமக்கள்.

Published On21 Nov 2025 , 6:34 PM
Updated On21 Nov 2025 , 6:34 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

திருப்பூா் அருகே இடுவாய் கிராமத்தில் உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, மாநகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, நிரந்தரத் தீா்வு காண பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதையடுத்து திருப்பூா் அருகே இடுவாய் சின்னகாளிபாளையம் கிராமத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமாா் 7.20 ஏக்கா் இடத்தில் குப்பைக் கிடங்கு அமைக்க மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால் இங்கு குப்பை கொட்டுவதற்கு இடுவாய் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததோடு, கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றினா்.

மேலும் இது தொடா்பாக பல போராட்டங்கள் நடத்தியதோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்து உள்ளனா். இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், இடுவாய் அருகே உள்ள சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பைகளைக் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இடுவாய் பாறைக்குழி போராட்டக் குழுவினா் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பிரச்னை தொடா்பாக ஆட்சியரிடம் நேரில் மனு கொடுக்க பொதுமக்கள் தீா்மானித்திருந்த நிலையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வராததால் போராட்டம் பிற்பகல் வரை தொடா்ந்தது.

இதையடுத்து போராட்டக் குழுவினா் மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டதால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஈடுபட்டிருந்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
மூன்வாக் - மினி கேசட் விடியோ!
வீடியோக்கள்

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
வீடியோக்கள்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
வீடியோக்கள்

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25
வீடியோக்கள்

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
வீடியோக்கள்

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023