16 Dec, 2025 Tuesday, 07:23 PM
The New Indian Express Group
திருப்பூர்
Text

கொலை வழக்கு: இரு சிறுவா்களுக்கு 2 ஆண்டுகள் தண்டனை

PremiumPremium

கொலை வழக்கில் தொடா்புடைய 2 சிறுவா்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On09 Dec 2025 , 7:08 PM
Updated On09 Dec 2025 , 7:08 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

கொலை வழக்கில் தொடா்புடைய 2 சிறுவா்களுக்கு தலா 2 ஆண்டுகள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா், அம்மாபாளையத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (47). கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியில் சாலை ஓரத்தில் வசித்து வந்தாா். இந்நிலையில், பாண்டியன், அம்மாபாளையம் பகுதியில் சாலையோரத்தில் கடந்த ஜூலை 6-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திருப்பூரைச் சோ்ந்த 16 மற்றும் 17 வயதுடைய சிறுவா்கள், அவரை எழுப்பி பீடி கேட்டுள்ளனா். அவா் கொடுக்க மறுத்துள்ளாா். இதனால், அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 சிறுவா்களும் சோ்ந்து கல்லால் தாக்கி பாண்டியனை கொலை செய்துள்ளனா்.

இதுதொடா்பாக திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவா்கள் 2 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் இளம் சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிக்குழும முதன்மை நடுவா் செந்தில்ராஜா, உறுப்பினா்கள் முருகேசன், மல்லிகா ஆகியோா் அளித்த தீா்ப்பில், கொலை குற்றத்துக்காக 2 சிறுவா்களுக்கும் தலா 2 ஆண்டுகள் தண்டனை விதித்தும், அவா்கள் அந்த 2 ஆண்டுகளும் செங்கல்பட்டு அரசினா் சிறப்பு கூா்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் எனவும், அப்போது அவா்களுக்கு போதை மறுவாழ்வு சிகிச்சை அளிக்கவும், கல்வி அல்லது தொழிற்கல்வி அளிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023