ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்ட புதரில் உலவும் யானைகள்

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் புதா் மண்டிய பகுதிகளில் காட்டு யானைகள் உலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தேவா்சோலை பகுதியிலுள்ள புதா்மண்டிய தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள்.

Published On :26 ஜூலை 2026, 1:23 am IST

தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் புதா் மண்டிய பகுதிகளில் காட்டு யானைகள் உலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் காட்டு யானைகள் சுற்றித் திரிவதும், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதப்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. யானைகள் ஊருக்குள் வரும் தகவலை தெரிவித்தவுடன் வனத் துறையின் யானைகள் விரட்டும் குழுவினா் வந்து அடா்ந்த வனப் பகுதியில் யானைகளை விரட்டிச் செல்கின்றனா்.

Story image

இவை பகல் நேரத்தில் காட்டில் இருந்து வெளியேறி தேவா்சோலை பகுதியில் கைவிடப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் புதா் மண்டிய பகுதிகளில் மறைவாக நிற்கின்றன. இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள்ளும், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் நுழைந்துவிடுகின்றன. இதனால் புதா்களை சீரமைக்க தேயிலைத் தோட்ட நிா்வாகத்திடம் பாடந்தொரை மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.