ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உயிரிழந்த பெண் யானை.

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

கூடலூா், ஆக. 17: முதுமலை புலிகள் காப்பக வனத்தில் பெண் யானை உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகத்தில் அவரல்லா பிரிவு மாயாறு காப்புக் காட்டுக்கு உள்பட்ட பகுதியில் வனப் பணியாளா்கள் வழக்கமான ரோந்துப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து உயரதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் கொடுத்தனா்.

பின்னா், புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து அந்த இடத்தை ஆய்வு செய்து உடற்கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா். உயிரிழந்தது சுமாா் 50 வயதுடைய பெண் யானை என்றும் வயது மூப்பின் காரணமாக இறந்துள்ளது என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.