18 Dec, 2025 Thursday, 12:31 AM
The New Indian Express Group
நீலகிரி
Text

பேத்தி பாலியல் வன்கொடுமை: தாத்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை

PremiumPremium

குன்னூா் அருகே 16 வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On10 Dec 2025 , 11:35 PM
Updated On10 Dec 2025 , 11:35 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

குன்னூா் அருகே 16 வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது தாய், தம்பி ஆகியோருடன் தனது தாயின் பெற்றோா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாயாா் அவரை குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் கா்ப்பமாக இருப்பதாகக் கூறினா். மேலும் இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா், குழந்தைகள் நல அலுவலா்களுக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இது தொடா்பாக குன்னூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியின் 75 வயதான தாத்தா அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாத்தாவை போலீஸாா் கைது செய்தனா்.

உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், சிறுமியின் தாத்தா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசிடம் இருந்து பெற்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து சிறுமியின் தாத்தா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023