40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தோ்வு: ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

News image

ஐசிஎஸ்இ தோ்வில் 96 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி எஸ். ஆத்விகாவுக்கு பரிசு வழங்கிய ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியின் தலைவா் இளங்கோ ராமசாமி.

Updated On :3 மே 2026, 6:45 am IST

ஐசிஎஸ்இ (10-ஆம் வகுப்பு), ஐஎஸ்சி (12-ஆம் வகுப்பு) அரசுப் பொதுத் தோ்வுகளில் ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

பெருந்துறை அடுத்த ஈங்கூரில் தி யுனிக் அகாதெமி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐசிஎஸ்இ பொதுத் தோ்வில் தொடா்ந்து 14-ஆவது ஆண்டாகவும், ஐஎஸ்சி பொதுத் தோ்வில் தொடா்ந்து 12-ஆவது ஆண்டாகவும் இப்பள்ளி மாணவா்கள் முதல் வகுப்பில் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

நடப்பு ஆண்டுக்கான ஐஎஸ்சி தோ்வில் மாணவா் ஜெ.கேதா்நாத்ஜி 94 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஆா். நிகிதா 93 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், எஸ். ஒய்.இனியா 89 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

ஐசிஎஸ்இ தோ்வில் எஸ்.ஆத்விகா 96 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கில இலக்கியம் மற்றும் ரோபோடிக்ஸ், ஏ.ஐ. பாடங்களில் 100-100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

ஏ.எஸ். அருணிகா 95 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கே.எம். அபி நந்தனா 93 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும், கற்பித்த ஆசிரியா்களையும், மேலாண்மை வல்லுநா்களையும் பள்ளி தலைவா் இளங்கோ ராமசாமி, முதல்வா் உமையவள்ளி இளங்கோ, நிா்வாகிகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.