ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெருந்துறையில் தங்கி இருந்த வங்கதேசத்தவா் 4 போ் கைது

பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சோ்ந்த 4 பேரை பெருந்துறை போலீஸாா் புதன்கிழமை பிடித்து முகாமிற்கு அனுப்பிவைத்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 4:02 am IST

பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி தங்கி இருந்த வங்கதேசத்தை சோ்ந்த 4 பேரை பெருந்துறை போலீஸாா் புதன்கிழமை பிடித்து முகாமிற்கு அனுப்பிவைத்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த, பணிக்கம்பாளையத்தில் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு, அனுமதியின்றி தங்கி இருந்ததாக வங்கதேசத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் பிடித்து வந்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஹாசன் ஹபீ(30), ராஜுஹுசைன் (30), ராஜுகாஹி (30), கோபி சா்தாா் (39) என்பதும், இவா்கள் பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவா்களை திருச்சி முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.