ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடம்பூா் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

தங்கவேலு.

Published On :20 ஜூலை 2026, 1:28 am IST

கடம்பூா் அருகே உள்ள இருட்டிபாளையத்தில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி இருட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு (68). வனத்தை ஒட்டியுள்ள இவரது தோட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளாா்.

இந்நிலையில், மஞ்சள் காட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை செய்து கொண்டிருந்தபோது, வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை தங்கவேலுவை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

நீண்ட நேரம் ஆகியும் தங்கவேலு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் தேடியபோது மஞ்சள் காட்டில் யானை தாக்கி அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.