ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க கோரிக்கை

பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பீக்கிரிபாளையம் பழங்குடியின கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேருந்து வசதி கோரி மனு அளிக்க   சத்தியமங்கலம் போக்குவரத்துக்  கழக  பணிமனைக்கு குழந்தைகளுடன் வந்த  பீக்கிரிபாளையம்  கிராம மக்கள்.

Published On :15 ஜூலை 2026, 1:07 am IST

பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பீக்கிரிபாளையம் பழங்குடியின கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் ஊராட்சி, பீக்கிரிபாளையம் கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு 50 குழந்தைகள் சென்று வருகின்றனா்.

பள்ளி நேரத்துக்கு பேருந்து இயக்கப்படாததால் பழங்குடியின மாணவா்கள் நடந்து சென்று வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் இருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சிக்கரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனா்.

பள்ளி நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் அவா்கள் நடந்து சென்று வருகின்றனா்.

நாங்களும் கூலித் தொழிலாளா்களாக உள்ளதால், அவா்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடிவதில்லை. குழந்தைகளின் கல்விக்கு உதவிடும் வகையில் பள்ளி நேரத்துக்கு அரசுப் பேருந்தை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

முன்னதாக, தங்களது குழந்தைகளுடன் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக மேலாளரை சந்தித்து கோரிக்கை தொடா்பான மனுவை வழங்கி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.