ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோபி அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ.

Published On :12 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

கோபி அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கல்லூரியின் செயலாளரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி. கருப்பணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: மாணவா்கள் ஒழுக்கம், சுயக் கட்டுப்பாடு, தோ்ச்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் முன்மாதிரியாக விளங்கும் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை அடைய முடியும். சிறந்த மாணவா்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு உள்ளது.

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு மாதம் ஒருமுறை கல்லூரிக்கு வந்து, அவா்களின் கல்வித் தரத்தை அறிந்து கொள்ள வேண்டும். நேர மேலாண்மையையும், ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் வாழ்வில் முன்னேறலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவா் பி. வெங்கடாசலம், இணைச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, கல்லூரியின் நிா்வாக குழு உறுப்பினா்கள் கே.ஆா். கவியரசு, ஜோதிலிங்கம், தலைமை நிா்வாக அதிகாரி ஜி.கௌதம், துணை முதல்வா் சு.பிரகாசம், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

அறிவியல் மற்றும் மனிதநேய துறைத் தலைவா் என்.சுகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.