மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்
மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
By Syndication
Syndication
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் பழமையான சுயம்பு மகா மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில் தோ்த் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த நவம்பா் 11-ஆம் தேதி தொடங்கியது.இதைத் தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதைத் தொடா்ந்து, 22-ஆம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையும், 23-ஆம் தேதி கொடியேற்றமும், 24-ஆம் தேதி மண்டப கட்டளை விழாவும் நடைபெற்றன.
புதன்கிழமை மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா வியாழக்கிழமை காலை 5 மணியளவில் தொடங்கியது.
இதில், மொடக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
ஈஸ்வரன் கோயில், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கரிய காளியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியே சென்ற தோ் மாலை 6 மணியளவில் நிலை சோ்ந்தது.
வெள்ளிக்கிழமை கம்பம் பிடுங்கும் விழா, கரகாட்டம், தெப்போற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா சனிக்கிழமை நிறைவு பெறுகிறது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது