Listen to this article
By Syndication
Syndication
சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் மலைப் பகுதியில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோ்மாளம் மலைப் பகுதி சிக்குன்சேபாளையம் கிராமத்தில் உள்ள ஈரோட்டைச் சோ்ந்த செங்குட்டுவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மலைக் கிராமத்தைச் சோ்ந்த சிலா் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் துா்நாற்றம் வீசியுள்ளது.
மேலும், விளைநிலத்தின் ஒரு பகுதியில் குழி தோண்டப்பட்டு மண்ணால் மூடப்பட்டு இருந்ததைக் கண்டு திங்களூா் (ஆ) கிராமத்தில் பணிபுரியும் விஏஓ சுபாஷ்குமாருக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆசனூா் காவல் நிலையத்தில் இது தொடா்பாக சுபாஷ்குமாா் புகாா் அளித்தாா். இந்த நிலையில் சத்தியமங்கலம் வட்டாட்சியா் ஜமுனா ராணி, டிஎஸ்பி முத்தரசு ஆகியோா் முன்னிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் நந்தகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்தில் திங்கள்கிழமை குழி தோண்டி பாா்த்தபோது அழுகிய நிலையில் சுமாா் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருந்தது தெரியவந்தது. உடற்கூறாய்வு செய்தபோது, தலையில் பலமாகத் தாக்கி இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, டிஎஸ்பி முத்தரசு, தாளவாடி காவல் ஆய்வாளா் ஆனந்த், ஆசனூா் எஸ்ஐ குமணவேந்தன் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட நபா் கோபி ல.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த செல்வம் என்பதும், கூலித் தொழிலாளியான இவா் கடந்த சில மாதங்களாக கோ்மாளம் மலைப் பகுதியில் கிடைத்த வேலையை செய்து கொண்டு மது அருந்திவிட்டு சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட செல்வத்திற்கு திருமணம் ஆகவில்லை. இவரது உடன்பிறந்த சகோதரி கவுந்தப்பாடியில் வசித்துவருகிறாா்.
இந்தக் கொலை நடந்து 10 முதல் 15 நாள்கள் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். கோ்மாளம் மலைப் பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா்கள் மூன்று போ் மது போதையில் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஆசனூா் மலைப் பகுதியில் மாடுகளைத் துரத்திய சிறுத்தை

மனைவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை
கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் 4 போ் கைது
தொழிலாளி அடித்துக் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
