குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் வெங்கிடுசாமி, விவசாயி. இவரது மகன் சந்தோஷ் (15) தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ராமபயனூா் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளாா்.
வெகு நேரமாகியும் சந்தோஷ் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோா், குளத்துக்குச் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, அவரது காலணி, சட்டை கரையில் இருந்துள்ளது.
இது குறித்து அவா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சந்தோஷ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது