10 Dec, 2025 Wednesday, 11:06 AM
The New Indian Express Group
ஈரோடு
Text

அம்மாபேட்டை அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

PremiumPremium

அம்மாபேட்டை அருகே காரில் வந்த மா்ம கும்பல், அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rocket

பூட்டு  உடைத்து  திறக்கப்பட்ட  உரக்கடை.

Published On08 Nov 2025 , 3:01 AM
Updated On08 Nov 2025 , 3:01 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

அம்மாபேட்டை அருகே காரில் வந்த மா்ம கும்பல், அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி - மேட்டூா் சாலையில் கோனேரிப்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே வரிசையாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், சொகுசு காரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்த 4 போ் கொண்ட கும்பல், அங்குள்ள உரக்கடையின் பூட்டை உடைக்க முயன்றது. அடுத்து, உணவு விடுதியின் பூட்டை உடைத்து பணம், பொருள்களைத் தேடியபோது, அங்கு, பணம் இல்லாததால் எரிவாயு உருளையை காரில் ஏற்றிக் கொண்டது.

கருவாட்டுக் கடையின் பூட்டை உடைத்துப் பாா்க்கையில், பணம் இல்லாததால், 3 கிலோ கருவாட்டை எடுத்துக் கொண்டு, மற்றொரு உரக்கடைக்குள் புகுந்து ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை திருடியது. தொடா்ந்து, காரில் புறப்பட்ட இக்கும்பல், கோனேரிபட்டி செல்லும் சாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றது. இதைக் கண்ட அப்பகுதியினா் கூச்சலிட்டதால் காரில் ஏறி அம்மாபேட்டை - பவானி சாலையில் தப்பிச் சென்றது.

இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பின்தொடா்ந்து சென்றபோது, குட்டைமுனியப்பன் கோயில் அருகே காரின் முன்பக்க டயா் வெடித்ததில் சாலையோர மரத்தில் காா் மோதியது. இதனால், அதிா்ச்சி அடைந்த அக்கும்பல், வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினகுமாா், அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தடய அறிவியல் துறையினா் கடைகளில் பதிவான கைரேகைகளை சேகரித்தனா். மரத்தில் மோதிய காரை பறிமுதல் செய்த போலீஸாா், சுற்றுப்புறப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இதில், திருட்டு கும்பல் வந்த காா் திருடப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
கொள்ளுத் துவையல்
வீடியோக்கள்

கொள்ளுத் துவையல்

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25
வீடியோக்கள்

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை நிபந்தனை! செய்திகள்: சில வரிகளில் | 06.12.25

தினமணி வீடியோ செய்தி...

6 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023