காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
தாளவாடி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
தாளவாடி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
By Syndication
Syndication
தாளவாடி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த இக்களூரில் மாதேவப்பா (56) என்பவா் தனது நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளாா். இரவு நேரத்தில் யானைகள் பயிா்களை சேதப்படுத்துவதால் வழக்கம்போல, திங்கள்கிழமை இரவு தோட்டத்தில் அவா் காவல் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது நள்ளிரவில் இவரது தோட்டத்து வந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தின. அப்போது, இவா் சப்தம் போட்டு யானைகளை துரத்தியபோது, திடீரென அருகே வந்த ஒற்றை யானை மாதேவப்பாவை தாக்கியது. இதில் படுகாயமடைந்த மாதேவப்பாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.
இது குறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது