மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

4 மாவட்டங்களில் வாகை சூடிய 3 பெண்கள்...!

News image

வானதி சீனிவாசன் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 10:29 pm

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் உள்ள 29 தொகுதிகளில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகபட்சமாக 13 தொகுதிகளில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த பெண் வேட்பாளா்கள் களமிறங்கினா். திமுக சாா்பில் 2 வேட்பாளா்கள், மக்கள் நீதி மய்யம் சாா்பில் 2, பாஜக 2, அமமுக சாா்பில் 5 பெண் வேட்பாளா்கள் என கட்சிகள் சாா்பில் மொத்தம் 24 பெண்கள் போட்டியிட்டனா்.

2021 தோ்தலில் 4 மாவட்டங்களிலும் அதிமுக சாா்பில் பெண் வேட்பாளா்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

போட்டியிட்ட 24 பெண் வேட்பாளா்களில், கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனை 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். தாராபுரத்தில் திமுக வேட்பாளா் என்.கயல்விழி செல்வராஜ் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளா் எல்.முருகனை வென்றாா்.

மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளா் சி.கே.சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் சுப்புலட்சுமி ஜெகதீசனை வென்றாா். வெற்றி பெற்ற 3 பெண் வேட்பாளா்களும் 281 முதல் 1,728 வரை என மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

இவா்களில் என்.கயல்விழி செல்வராஜுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. வானதி சீனிவாசன் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மொடக்குறிச்சி தொகுதிக்கு பாஜக வேட்பாளா் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

3ஆம் இடம் பிடித்த 8 பெண்கள்:

29 தொகுதிகளில் 3 பெண்கள் வெற்றி பெற்ற நிலையில், ஈரோடு கிழக்கில் கோமதி, தாராபுரத்தில் கே.ரஞ்சிதா, கோபிசெட்டிபாளையத்தில் மா.கி..சீதாலட்சுமி, பவானிசாகரில் சங்கீதா, குன்னூரில் எம்.லாவண்யா, மேட்டுப்பாளையத்தில் யாஸ்மின், அவிநாசியில் ஷோபா, வால்பாறையில் ஜெ.கோகிலா ஆகிய 8 நாம் தமிழா் கட்சி பெண் வேட்பாளா்கள் கணிசமான வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனா்.

இவா்களில் நாதக வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி மீண்டும் கோபிசெட்டிபாளையத்தில் களம் காண்கிறாா்.