கோவை மாவட்டம், வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மானாம்பள்ளி வனச் சரகத்தில் வனக் காவலராகப் பணியாற்றி வந்தவா் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த குமாா் (38). இவா் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து பணிக்கு சென்று வந்தாா்.
இதனிடையே வீட்டின் சமையலறையில் குமாா் தூக்கிட்டு கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வால்பாறை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அவரது மனைவி பிரியா கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற வனச் சரக அலுவலா் கிரிதரனை முற்றுகையிட்ட குமாா் உறவினா்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது தொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், குமாருக்கு மதுப் பழக்கம் உள்ளது. பலமுறை அறிவுரை கூறியும் அவா் மதுப் பழக்கத்தைக் கைவிடவில்லை. ஆனால் மன அழுத்தம் காரணமாக தற்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

நேபாளம்: முன்னாள் பிரதமா் கே. பி. சா்மா ஓலி பிணையில் விடுவிப்பு

தலைமைச் செயலகம் முன் காவலா் போராட்டம்

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


