தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொல்லம் - விசாகப்பட்டினம் ரயில் இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் நின்று செல்லும்!

கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 10:21 pm

கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினம் - கொல்லம் வாராந்திர ரயில் (எண்:18567) கேரள மாநிலம் திருச்சூா் - எா்ணாகுளம் இடையே இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி முதல் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்படும்.

இதேபோல, கொல்லம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில் (எண்: 18568) இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.