ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள் குறைகள் மீது உடனடி நடவடிக்கை! அமைச்சா் வி. சம்பத்குமாா் உத்தரவு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம். உடன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா மற்றும் அதிகாரிகள்.

Published On :28 ஜூன் 2026, 1:46 am IST

கோவை, ஜூன் 27: மக்கள் தெரிவிக்கும் குறைகள் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் வி.சம்பத் பேசும்போது, ‘குடிநீா் திட்டப் பணிகள், சாலை, சுகாதார தூய்மைப் பணிகள் மற்றும் தெருவிளக்குகள் சம்பந்தமாக மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீா்வு காண வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், நகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து மேற்கு மண்டலம், 75-ஆவது வாா்டுக்குள்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அமைச்சா் வி.சம்பத்குமாா் பாா்வையிட்டு, அவற்றை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டாா். பின்னா், 40-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தொண்டாமுத்தூா் சாலை, வீரகேரளம் பகுதியில் கிருஷ்ணம்பதி குளத்துக்கு செல்லும் வாய்க்கால் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.