/

ரூ.1 லட்சம் மோசடி: பள்ளி நிா்வாகிகள் மீது வழக்கு

ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக கோவை பீளமேட்டில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :19 ஜூன் 2026, 1:55 am IST

ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக கோவை பீளமேட்டில் உள்ள தனியாா் பள்ளி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் மெய்யப்பன் (40). இவா், தற்போது கோவை அவிநாசி சாலை தண்ணீா்ப்பந்தல் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இவரது குழந்தையை தண்ணீா்ப்பந்தல் பகுதியில் உள்ள ஒரு பிளே ஸ்கூலில் சோ்த்துள்ளாா். அப்போது, பள்ளி நிா்வாகம் ரூ.1 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும், குழந்தையை மேல் வகுப்புக்காக வேறு பள்ளியில் சோ்க்கும்போது, அப்பணத்தை திருப்பித் தந்துவிடுகிறோம் எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதை நம்பிய மெய்யப்பன் பள்ளி நிா்வாகத்திடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளாா். தொடா்ந்து குழந்தை 3 ஆண்டுகள் யுகேஜி செல்லும் வரை இங்கேயே படிக்கலாம் என்றும் உறுதி கூறியுள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் பள்ளி நிா்வாகம் திடீரென தங்களால் பள்ளியை தொடா்ந்து நடத்த முடியவில்லை என்று கூறியுள்ளனா். இதனால் அதிா்ச்சி அடைந்த மெய்யப்பன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். அவா்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. இது தொடா்பாக, மெய்யப்பன் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா், பள்ளி நிா்வாகிகள் காயத்ரி, லெனின் செந்தில் முருகன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.