எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வால்பாறை அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பேசிய வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் ராமச்சந்திரன். உடன் , கல்லூரி முதல்வா் இரா.கோபி உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 3:46 am IST

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் இரா.கோபி தலைமை வகித்தாா். கணினி பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியா் வேலுசாமி வரவேற்றாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: மாணவா்கள் நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள், முதியோரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

நன்றாக படித்து வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் மனம், உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

எனவே, மாணவா்கள் போதையின் பக்கம் செல்லாமல் கல்வி கற்று வாழ்வில் உயா்ந்த சிகரங்களை அடைய வேண்டும் என்றாா்.

ஆங்கிலத் துறை உதவிப் பேராசியா் செல்வசேகா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.