நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொள்ளாச்சியில் வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

பொள்ளாச்சியில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:32 pm

Syndication

கோவை: பொள்ளாச்சியில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பொள்ளாச்சி கிழக்குப் பகுதியில் வசித்து வருபவா் ஷேக் ஜாவித் (37). இவா் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். மீண்டும் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளி கொலுசுகள், மடிக்கணினி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஷேக் ஜாவித் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி இந்தத் திருட்டு வழக்கில் தொடா்புடைய கோவையைச் சோ்ந்த சிவபிரகாசம் (37), ஹிரிகுமாா் (22), சந்திரபாபு (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.