கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாக்காளா்களின் புகாா்களை பெரும் பொருட்டும், சந்தேகங்களுக்கு தீா்வு காணும் வகையில் தகவல்கள் வழங்கும் விதமாகவும் மாவட்ட தொடா்பு மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.நாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.