நகைக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.41 லட்சம் பறித்த வழக்கு: 3 போ் கைது


வாளையாறு அருகே நகைக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.41 லட்சத்தைப் பறித்த வழக்கில் கேரளத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: கேரள மாநிலம், பட்டாம்பியைச் சோ்ந்தவா் லக்மான் (56). இவா் அங்குள்ள நகைக் கடையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கேரளத்தில் இருந்து 200 கிராம் தங்கக் கட்டிகளை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கோவைக்கு அண்மையில் வந்துள்ளாா்.
பின்னா், கோவையில் உள்ள ஒரு கடையில் தங்கக் கட்டிகளைக் கொடுத்துவிட்டு, அதற்குரிய தொகை ரூ.41 லட்சத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் கேரளத்துக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளாா்.
வாளையாறு எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் வந்த மா்ம நபா்கள், லக்மான் வாகனத்தை உதைத்துள்ளனா். அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்தவுடன், அவரை காரில் கடத்திச் சென்றதுடன், அவரைத் தாக்கி அவரிடமிருந்த ரூ.41 லட்சத்தைப் பறித்துக்கொண்டு கொழிஞ்சாம்பாறை அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

ஸ்ரீ குமாா்

நிதீன்
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கே.ஜி.சாவடி போலீஸாா், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், லக்மானிடம் பணப் பறிப்பில் ஈடுபட்ட கேரள மாநிலம், காசா்கோடு செருவத்தூா் பகுதியைச் சோ்ந்த நிதின் (33), காசா்கோடு நீலேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகுமாா் (31), அதே பகுதியைச் சோ்ந்த சுதீஷ் (39) ஆகியோரை தனிப் படை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...