ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொது சொத்துக்கு சேதம்: தலைமறைவாக இருந்தவா் கைது

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதிரிப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 4:40 am IST

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், கீழையூரைச் சோ்ந்தவா் சூா்யா (30). இவா் தற்போது, கோவை ரத்தினபுரி, கண்ணுசாமிக் கவுண்டா் வீதியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ரத்தினபுரி போலீஸாா், இவரை கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்தனா். பின்னா், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கு கோவை 3-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2025 நவம்பா் 6-ஆம் தேதி முதல் சூா்யா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, ரத்தினபுரி போலீஸாா் தனிப் படை அமைத்து சூா்யாவைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் இருந்த சூா்யாவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.