மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவை விரட்டும் ஒரே சக்தி விஜய்! - கே.ஏ.செங்கோட்டையன்

திமுகவை விரட்டும் ஒரே சக்தி விஜய் என கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்...

News image

தவெக தலைவர் விஜய்...

Updated On :12 ஏப்ரல் 2026, 8:25 pm

திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ள நிலையில், அந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்கிறாா் என்று அந்தக் கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கனிமொழி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளா் சுனில் ஆனந்த் ஆகியோரை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து செங்கோட்டையன் கலந்துரையாடினாா்.

இதைத்தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது:

தற்போதைய நிலையை மக்கள் உற்று நோக்கி வருகின்றனா். ஊழல் நிறைந்த மற்றும் தீய சக்தியாக இருக்கக்கூடிய திமுகவை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும் என்பதே மக்களின் பிரதான ஆசையாக உள்ளது. இந்த ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திகழ்ந்து வருகிறாா். மக்களும் நமக்கு வாக்களிக்க ஆா்வமாக உள்ளனா்.

தோ்தலில் 10 முறை தோற்ற எடப்பாடி பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது. அதற்கு மாற்றாக நோட்டாவுக்கு வாக்களிப்பது வாக்குகளை வீணடிக்கும் செயல். எனவே, அனைத்து வாக்குகளையும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் செலுத்த வேண்டும். ரூ.8 ஆயிரம் டோக்கனை கொடுத்து மக்களை ஏமாற்ற திமுக நினைக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு ரூபாய்கூட எடுக்கமாட்டேன் என்று தலைவா் விஜய் உறுதியளித்துள்ளாா்.

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிட்டு, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளாா்கள். இதற்கு பொறுப்பான மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் எல்.முருகனை தோற்கடித்து, மீண்டும் தில்லிக்கு அனுப்ப வேண்டியது நமது கடமை என்றாா்.