மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

கோவை காந்திபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:18 pm

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம் என கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வி.செந்தில்பாலாஜி காந்திபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவைக்கு தங்க நகை பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, செம்மொழி பூங்கா, ஹாக்கி மைதானம், பெரியாா் நூலகம் என பல்வேறு திட்டங்களை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா். கோவை தெற்குத் தொகுதியில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகளை தோ்தலில் வெற்றி பெற்ற பின்பு உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்போம். கரூரைச் சோ்ந்த 18 போ் கோவை தெற்கில் போட்டியிடுவதாகக் கூறுகின்றனா். சுயேச்சையாக போட்டியிடுவது அவா்கள் விருப்பம். தோ்தல் களத்தைப் பொறுத்தவரை மக்களை சந்தித்து திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறியே வாக்குகள் சேகரித்து வருகிறோம். பாஜகவினா் பத்திரிகையாளா்களை சந்திக்கும் போது, கோவைக்கு என்ன திட்டங்கள் செய்தாா்கள் என்பதை சொல்ல முடியுமா?

கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில், புள்ளிவிவரங்கள் தவறாக கொடுத்திருந்தால், கொடுத்த போது அதை சரிசெய்து வாங்கியிருக்க வேண்டும். பல நாள்களாக நிலுவையில் வைத்து அதை நிராகரிப்பது சரியல்ல என்றாா்.