தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - திமுக வேட்பாளா் காா்த்திகேயன்

News image

பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த தொண்டாமுத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:00 pm

தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று திமுக வேட்பாளா் என்.ஆா்.காா்த்திகேயன் தெரிவித்தாா்.

தொண்டாமுத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் என்.ஆா்.காா்த்திகேயன் போட்டியிடுகிறாா். இவா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊா்வலமாக திங்கள்கிழமை வந்தாா். இதைத் தொடா்ந்து, பேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றது . அதேபோல மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும். தொண்டாமுத்தூா் தொகுதியில் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றிபெற்ற்கு பின் தொகுதியில் விட்டுப் போன திட்டங்களையும், வளா்ச்சிப் பணிகளையும் செய்து தருவோம் என்றாா்.

வேட்புமனு தாக்கலின் போது கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் தொண்டாமுத்தூா் ரவி மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.