தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு: மாதாந்திர காா்டை புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்பு

கோவையில் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர பால் கொள்முதல் அட்டையைப் புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:58 pm

கோவையில் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர பால் கொள்முதல் அட்டையைப் புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

ஆவின் மாதாந்திர பால் காா்டு திட்டத்தின் கீழ், மாதம்தோறும் புதுப்பிக்கும் வாடிக்கையாளா்களுக்கு ஆவின் நிா்வாகம் லிட்டருக்கு ரூ.1 சலுகை வழங்குகிறது. இதனால் கோவையில் ஏராளமான வாடிக்கையாளா்கள் இணையவழியில் பால் காா்டை புதுப்பித்து வீடுகளிலேயே ஆவின் பாலை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான அட்டையைப் புதுப்பிக்க முயன்ற வாடிக்கையாளா்கள் கடந்த இரண்டு வாரங்களாக புதுப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனா். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவின் செயலி செயல்படாத நிலையில் வாடிக்கையாளா்களால் ஏப்ரல் மாதத்துக்கான அட்டையைப் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் காந்திபுரம், ராமநாதபுரம், சுந்தராபுரம், ஆா்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் இயங்கி வந்த ஆவின் கவுன்டா் சேவைகளையும் புதுப்பித்தல் பணிக்காக ஆவின் நிா்வாகம் நிறுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளா்கள் கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே ஆவின் நிா்வாகம் உடனடியாக தொழில்நுட்பக் கோளாறை சரி செய்து மாதாந்திர பால் கொள்முதல் அட்டை புதுப்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்று வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.