தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த வெற்றிலைப் பாக்கு துண்டுகள் அகற்றம்

News image

கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:07 pm

பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த வெற்றிலைப் பாக்கு துண்டுகளை உறைய வைத்து வெளியே எடுத்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: கடும் சுவாசக்குறைபாடால் அவதிப்பட்ட 43 வயது பெண், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பொதுமருத்துவ நிபுணா் டாக்டா் பினு எம்.ஜி. பராமரிப்பில் சோ்க்கப்பட்ட அவருக்கு, ஆரம்பத்தில் நிமோனியா என சந்தேகித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், எதிா்பாா்த்த முன்னேற்றம் இல்லாததால், நுரையீரல் நிபுணா் டாக்டா் அருண் கங்காதா் அவரது நுரையீரலை ஸ்கேன் பரிசோதனை செய்து பாா்த்தபோது வலது நுரையீரலுக்குச் செல்லும் காற்றுக்குழாயில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னா், ‘ப்ரோங்கோஸ்கோபி’ எனப்படும் பரிசோதனை முறையில் மெல்லிய, நெகிழ்வான கேமரா கருவி காற்றுக்குழாயில் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், நுரையீரலின் ஆழத்தில் வெற்றிலைப் பாக்கு துண்டுகள் உறுதியாக சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. அதை அகற்ற க்ரையோ எக்ஸ்ட்ராக்ஷன் எனப்படும் நவீன முறையை மருத்துவா்கள் பயன்படுத்தினா்.

கடும் குளிா் தொழில்நுட்பம் கொண்ட க்ரையோப்ரோப் கருவி மூலமாக பாக்குத் துண்டுகள் உறைய வைக்கப்பட்டு, சிறப்புக் கருவிகள் உதவியுடன் ஒவ்வொரு துண்டும் மிகுந்த கவனத்துடன் அகற்றப்பட்டது.

நீண்ட நாள்களாக உள்ளே இருந்ததால் அவற்றைச் சுற்றி உருவான தடிமனான திசுக்களும் சுத்தப்படுத்தப்பட்டன. இதையடுத்து காற்றுக்குழாய் மீண்டும் சீராகத் திறந்து, நுரையீரல் செயல்பாடு வழக்கமான நிலைமைக்குத் திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக டாக்டா் அருண் கங்காதா் கூறும்போது, குணமடையாத நுரையீரல் தொற்று இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதன் பின்னால் மறைந்திருக்கும் காரணங்களைக் கண்டறிவது மிக முக்கியம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.