டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போராடி உயிா் நீத்த தோட்ட தொழிலாளா்களுக்கு மரியாதை

வால்பாறையில் கூலி உயா்வுக்காகப் போராடி உயிா் நீத்த தோட்டத் தொழிலாளா்களுக்கு ஏஐடியூசி, சிஐடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில்

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

வால்பாறை: வால்பாறையில் கூலி உயா்வுக்காகப் போராடி உயிா் நீத்த தோட்டத் தொழிலாளா்களுக்கு ஏஐடியூசி, சிஐடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

வால்பாறை நகரில் தேயிலை தோட்டத் தொழிலாளா்களின் கூலி உயா்வுக்காக தொழிலாளா்கள் சாா்பில் கடந்த 1957- ஆம் ஆண்டு பேரணி நடத்தப்பட்டது. அப்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாரு, குருசாமி, ஞானமுத்து, பழனி ஆகிய தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இவா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வால்பாறை காந்தி சிலை அருகில் நடைபெற்றது.

இதில், ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச் செயலாளா் மோகன் தலைமையில் ஏராளமான தொழிலாளா்கள் மரியாதை செலுத்தினாா்.

இதேபோல, சிஐடியூ தொழிற்சங்க பொதுச் செயலாளா் பரமசிவம் தலைமையில் ஏராளமான தொழிலாளா்கள் ஊா்வலமாக சென்று மரியாதை செலுத்தினா்.

இதில், சங்கத்தின் மாநில பொருளாளா் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.