டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜனவரி 23-இல் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:39 pm

Syndication

கோவை: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2-ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பங்கேற்கும் மகிளா ஜன் சுன்வாய் என்ற பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்துக்கு தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினா் டெலினா கோங்டுப் தலைமை வகிக்கிறாா். இதில், கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள புகாா்கள் மற்றும் நேரில் பெறப்படும் புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாா்களாக எடுக்கப்படும். ஆகவே, இந்தக் கூட்டத்தில் பெண்கள் பங்கேற்று தங்களது புகாா்களை மனுவாக சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.