Listen to this article
By Syndication
Syndication
கோவை காவல் துறையில் ‘பிங்க் பேட்ரோல்’ என்ற புதிய நவீன ரோந்து வாகன முறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 நாள்களில் பணமின்றி தவித்த சேலம் மாணவியை போலீஸாா் மீட்டனா்.
கோவை விமான நிலையம் அருகே கடந்த 2-ஆம் தேதி கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநகரில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க ‘பிங்க் பேட்ரோல்’ என்ற புதிய நவீன ரோந்து வாகன முறையை கோவை மாநகர காவல் ஆணையா் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்
இளஞ்சிவப்பு (பிங்க்) நிற காரில் போலீஸாா் இரவு முழுவதும் இருட்டான பகுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோவை காட்டூா் சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கவிதா மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பிங்க் பேட்ரோல் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே 19 வயதுப் பெண் நள்ளிரவில் தனியாக நின்று கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த காவல் உதவி ஆய்வாளா் கவிதா அவரை அழைத்து விசாரித்தாா். விசாரணையில் அவா், சேலத்தைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவி என்றும், வீட்டில் கைப்பேசியை அதிகம் நேரம் பேசிக் கொண்டிருந்ததால் அவரது பெற்றோா் திட்டியதால் கோபித்து கொண்டு கோவைக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், பணம் இல்லாமல் எங்கு செல்வது என்று தவித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் சரவணன் அந்தப் பெண்ணை கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தாா். அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா்கள் சேலத்திலிருந்து காட்டூா் காவல் நிலையத்துக்கு வந்தனா். அவா்கள் தங்களது மகளைக் காணவில்லை எனத் தேடி வந்ததாகத் தெரிவித்தனா்.
மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் போலீஸாா் அறிவுரை கூறி, அவா்களுடன் அனுப்பிவைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து 3 பேரும் சிறையில் அடைப்பு
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை: மூவருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்

பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
