17 Dec, 2025 Wednesday, 04:29 AM
The New Indian Express Group
கோயம்புத்தூர்
Text

தடாகத்தில் செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம் விதிக்க அரசு பரிந்துரை?

PremiumPremium

தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு சுமாா் ரூ.900 கோடி அபராதம் விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On06 Dec 2025 , 6:37 PM
Updated On06 Dec 2025 , 6:37 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு சுமாா் ரூ.900 கோடி அபராதம் விதிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகேயுள்ள ஓடைகள், நீா்வழித்தடங்களில் சட்டவிரோதமாக சுமாா் 1.10 கோடி கியூபிக் மீட்டா் அளவு மண் அள்ளப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, செங்கல் சூளைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகளை அளவீடு செய்து உரிமையாளா்களிடம் இழப்பீடு பெற சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வழக்குத் தொடா்ந்தனா்.

இதைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் புதுதில்லியைச் சோ்ந்த ஆற்றல், வளங்கள் நிறுவனத்தின் (டெரி) நிபுணா்கள் சுமாா் 4 மாதங்கள் ஆய்வு செய்து, ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்திருந்தனா்.

அபராதத் தொகை குறித்து மறுபரிசீலனை செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 3 முறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, சூழல் பாதிப்புகளில் ஈடுபட்டதற்காக செங்கல் சூளைகளுக்கு சுமாா் ரூ.900 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கும் என்றும், பின்னா் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளா்களிடம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023