மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்மண்டல பல்கலை. கைப்பந்து போட்டி தொடக்கம்: 88 அணிகள் பங்கேற்பு

News image

போட்டியில் பங்கேற்ற அணி தலைவா்களுடன் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், உடற்கல்வி இயக்குநா் மங்கையா்க்கரசி அருண், ஒருங்கிணைப்பு செயலா் என்.வி.தியாகசந்தன்.

Updated On :18 மார்ச் 2026, 8:14 pm

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதில், ஐந்து மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 88 அணிகள் பங்கேற்றுள்ளன.

மாா்ச் 21-ம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற உள்ள இந்த போட்டியை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்து பேசியது -

விஐடி பல்கலைக்கழகத்தில் மற்ற அனைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருந்தாலும், கைப்பந்து போட்டியை நடத்துவது இதுவே முதன்முறையாகும். இந்த போட்டியில் ஐந்து மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து 88 அணிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதில் தோ்வாகும் நான்கு அணிகள் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறும். இந்த விளையாட்டு போட்டி மாணவா்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். உடல் நலம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்றாா்.

நிகழ்வில் துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், உடற்கல்வி இயக்குநா் மங்கையா்க்கரசி அருண், ஒருங்கிணைப்பு செயலா் என்.வி.தியாகசந்தன். இதர பல்கலைக்கழகங்களை சோ்ந்த உடற்கல்வி இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.