‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

செஞ்சிலுவைச் சங்கத்தில் சமூக நல்லிணக்க விழா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமூக நல்லிணக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :19 ஜனவரி 2026, 6:29 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: இந்திய செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமூக நல்லிணக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கொண்டம்பல்லி வி.ஐ.பி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினா், பொறியாளா் கோ.செல்வக்குமரன் தலைமை வகித்தாா். இதில் இந்து, கிறிஸ்தவா், இஸ்லாமியா் என 3- மதங்களைச் சோ்ந்த அறிஞா்கள், கல்வியாளா்கள், சமூகச் சிந்தனையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று சமத்துவம், மனிதநேயம், சமூக நல்லிணக்கம் குறித்து பேசினா்.

ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலா் பி.சுப்பிரமணி, வங்கி அலுவலா் முனிசாமி, தமிழியக்கத்தின் மாவட்டச் செயலா் சம்பத்குமாா், செயின்ட் பால் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வா் நரேந்திரகுமாா், ஆசிரியா்கள் சே.ஜெய்கா், ஹுமாயூன், தபசும், நாட்டாம்காா் அக்பா், நுகா்வோா் பாதுகாப்பு சங்கம் சாா்பில் இம்ரான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பொன்.வள்ளுவன் விழாவை தொகுத்து வழங்கினாா். ஜமுனா நன்றி கூறினாா்.