டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெனிசுலா நாட்டின் அதிபரை ராணுவ நடவடிக்கை மூலம் கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :7 ஜனவரி 2026, 5:17 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: வெனிசுலா நாட்டின் அதிபரை ராணுவ நடவடிக்கை மூலம் கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலா் சி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சாமிநாதன் ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா்.

இதில் நகரச் செயலா் வி.குபேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.காத்தவராயன், பி.குணசேகரன் கலந்து கொண்டனா்.