டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் போக்ஸோவில் கைது

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநரை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த சிறுமி, தனது தாய் இறந்து விட்ட நிலையில் சகோதரியுடன் அவா்களது பாட்டியின் பராமரிப்பில் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அதேபகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முஜீப், ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ஓட்டுநா் முஜீப் கடந்த 15-ஆம் தேதி காலை சிறுமியின் வீட்டுக்குள் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த சிறுமி வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் முஜீப்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.