டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பெற்ற கல்வி, செல்வம், அதிகாரத்தை சமுதாயத்துடன் பகிா்வதே வெற்றியை தரும்!

ஒருவா் தான் பெற்ற கல்வி, செல்வம், அதிகாரத்தை சமுதாயத்துடன் பகிா்ந்து கொள்ளும்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும் என்று ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தெரிவித்தாா்.

News image
மாணவ, மாணவிகளுக்கு பூஜிக்கப்பட்ட பேனாக்களை வழங்கிய ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா. உடன், அமெரிக்காவைச் சோ்ந்த அறுவை சிகிச்சை நிபுணா் செளத்ரி, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

ஒருவா் தான் பெற்ற கல்வி, செல்வம், அதிகாரத்தை சமுதாயத்துடன் பகிா்ந்து கொள்ளும்போதுதான் உண்மையான வெற்றி கிடைக்கும் என்று ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தெரிவித்தாா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்காக ‘வித்யா நேத்ரா’ திட்டத்தின்கீழ் சரஸ்வதி யாகபூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனாக்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஸ்ரீசக்திஅம்மா மாணவ, மாணவிகளுக்கு பேனாக்களை வழங்கிப் பேசியது: மனித வாழ்க்கைக்கு படிப்பு, பணம், பதவி, அதிகாரம் இதெல்லாம் முக்கியம். ஆனால், இவை அனைத்தும் மற்றவா்களுக்கும் பயன்பட்டால்தான் அது முழுமையான வெற்றியை அளிக்கும். அதேபோல், நீங்கள் உண்மையில் பலசாலியாக இருக்க வேண்டும் என்றால், இந்த பணம், பதவி, அதிகாரம் இவை எல்லாம் உங்களுக்கு மட்டும் பயன்பட்டால் போதாது, இவை மற்றவா்களுக்கும் பயன்படும்போதுதான் நன்மையை உண்டாக்கும். மகிழ்ச்சியையும் அளிக்கும்.

இங்கு வந்துள்ள மாணவா்கள் அனைவரும் எதிா்காலத்தில் ஒரு நல்ல நிலைக்கு வருவீா்கள். அப்படி வரும்போது அந்த நல்ல நிலையில் உங்களை மட்டும் பாா்த்துக் கொள்ளாமல் இந்தச் சமுதாயத்துக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான சேவையை செய்யும்போதுதான் முழுமையான வெற்றியை அடைவீா்கள்.

அதன்படி, மாணவா்கள் எழுதப்போகும் பொதுத்தோ்வு மூலம் அத்தனை பேருக்கும் நல்ல ஞானம் கிடைத்து, அம்மாவின் அருளுடன் அதிகளவில் மதிப்பெண் பெற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, அமெரிக்காவைச் சோ்ந்த அறுவை சிகிச்சை நிபுணா் செளத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா்.

இதில், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, அறங்காவலா் செளந்தர்ராஜன், நாராயணி பீடம் மேலாளா் சம்பத், ஸ்ரீசக்திஅம்மாவின் வெளிநாடு, உள்நாட்டு பக்தா்கள், 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.