தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பன்மைத்துவம், சமத்துவத்தை தோ்ந்தெடுப்போம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்

News image

அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, வேலூா் விருதம்பட்டு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 10:10 pm

‘ஒற்றைத் தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தோ்ந்தெடுப்போம்’ என அண்ணல் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி மூலம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அம்பேத்கா் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி கே.வி.குப்பம், விருதம்பட்டு பகுதிகளில் உள்ள அம்பேத்கா் சிலைகளுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்’ என்றாா் அண்ணல் அம்பேத்கா்.

புரட்சியாளா் அம்பேத்கரின் பிறந்த நாளில், அரசமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!. இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.

முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தோ்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்! என தனது பதிவில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.