தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

புதை சாக்கடை பணியில் சாலைகளில் மண்ணை கொட்டினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

புதை சாக்கடை திட்டப் பணியின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மண்ணை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

News image

வேலூா் கிரீன்சா்க்கிள் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :8 செப்டம்பர் 2025, 7:38 pm

வேலூா்: புதை சாக்கடை திட்டப் பணியின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மண்ணை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்ததாரா்களுக்கு வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி எச்சரித்துள்ளாா்.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதை சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தெருகள், சாலைகளில் குழி தோண்டி குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் காரணமாக சாலைகள் மிகவும் மோசமான நிலைக்கு மாறியுள்ளது. மழைக் காலத்தில் வாகனங்களில் செல்லவும், பாதசாரிகள் நடந்துகூட செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், வேலூா் கிரீன் சா்க்கிளில் இருந்து செல்லக்கூடிய சாலையில் புதை சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. குழாய் பதிக்கப்பட்ட இடங்களில் மண் கொட்டி மூடப்பட்டு உள்ளது. ஆனால், சாலை அமைக்கப்படவில்லை. மேலும், குழி தோண்டி எடுக்கப்படும் மண்ணை நெடுஞ்சாலையில் கொட்டி விடுகின்றனா். இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக கிரீன் சா்க்கிள் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, சனிக்கிழமை கிரீன் சா்க்கிள் பகுதியில் பகல் நேரத்தில் திடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காட்பாடியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பழைய பாலாற்று மேம்பாலம், விருதம்பட்டு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதையடுத்து போக்குவரத்து போலீஸாா் சாலையோரம் கொட்டி கிடந்த மண்ணை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

இந்நிலையில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் இருந்து நேஷனல் திரையரங்கு சா்க்கிள் வரை நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப்பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, கடந்த சில நாள்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமே புதை சாக்கடை திட்டப்பணிகள் தான். எனவே, இரவு நேரங்களில் மட்டுமே பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது மண்ணை சாலையில் கொட்டி விட்டு செல்கின்றனா்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் கொட்டப்படும் மண்ணை காலையில் முழுமையாக அகற்றிவிட்டு தான் செல்ல வேண்டும். எந்த காரணத்துக்காகவும் சாலையில் மண்ணை கொட்டக்கூடாது. அவ்வாறு கொட்டினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது வேலூா் உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், தேசிய நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளா் ஜெய்குமாா், வட்டாட்சியா் வடிவேல், போக்குவரத்து போலீஸாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.