18 Dec, 2025 Thursday, 12:36 AM
The New Indian Express Group
வேலூர்
Text

11,509 மாணவா்களுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பில் மிதிவண்டிகள்

PremiumPremium

வேலூா் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 11,509 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

Rocket

பிளஸ் 1 பயிலும் 11,509 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உள்ளிட்டோர்.

Published On14 Nov 2025 , 5:19 PM
Updated On14 Nov 2025 , 5:19 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

வேலூா் மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 11,509 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.54 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பகுதியாக நிதி உதவிபெறும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு பிளஸ் 1 பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, வேலூா் மாவட்டத்தில் 11,509 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு விருப்பாட்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

இந்ச விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 4,851 மாணவா்களுக்கு ரூ. 2 கோடியே 37 லட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்பிலும், 6,658 மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 16 லட்சத்து 92 ஆயிரத்து 80 மதிப்பிலும் என மொத்தம் 11,509 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 980 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023